திருகோணமலையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மீது கடற்படை துப்பாக்கி சூடு – ஒருவர் படுகாயம்

திருகோணமலையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

திருகோணமலை – குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீதே கடற்படையினர்  துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர் எனவும், துப்பாக்கி பிரயோகத்தில்  ஒருவர் காயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.