யாழ்ப்பாணம் அனலைதீவு ஐயனார் கோவில் கலசங்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,  அவரிமிருந்து 06 பித்தளை கலசங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐயனார் கோவிலில் இருந்து பித்தளை கலசங்கள் காணாமல் போயிருந்தன. அது தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் , ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.06.25) சந்தேகத்தில் ஒருவரை கைது செய்து , காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் 06 கலசங்களை காவற்துறையினர்  மீட்டுள்ளனர்.

குறித்த நபரை காவல் நிலையத்தில் தொடர்ந்து தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்