மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்மகாராஷ்டிராவில் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் சாலையில் குழந்தையை பெற்றெடுத்த பழங்குடிப் பெண்

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் போர்மாலி கிராமத்தில், அவசர ஊர்தி கிடைக்காததால் ஒரு பழங்குடியின பெண் சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் அவல நிலை நேர்ந்துள்ளது.

ஆம்புலன்ஸ் கேட்டு அரசு மருத்துவமனையைப் பல முறை தொடர்பு கொண்டும் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

வேறு வழியில்லாததால், பெண்ணின் கணவர் இருசக்கர வாகனத்தில் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இருப்பினும், வழியிலேயே அவருக்குப் பிரசவ வழி ஏற்பட்டு, சாலை ஓரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

உள்ளூர் பெண்கள் பிரசவத்துக்கு உதவினாலும், தொப்புள் கொடியை வெட்டுவதில் அவர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தச் சம்பவம் மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. இந்தப் பகுதியின் எம்.பி  ரக்ஷா கட்ஸே மத்திய அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? முழு விவரம் இந்த வீடியோவில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு