பிரான்சின் மிகப்பெரிய பாலியல் வன்கொடுமைன வழக்குகளில் ஒன்றில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜோயல் லு ஸ்கௌர்னெக்கிற்கு கிட்டத்தட்ட 300 பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வான்ஸில் உள்ள முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணரான ஜோயல் லு ஸ்கௌர்னெக் மீது 111 பாலியல் பலாத்காரங்கள் மற்றும் 189 பாலியல் வன்கொடுமைகள் சுமத்தப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள்.

அவருக்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் லெ ஸ்கௌர்னெக் ஏற்கனவே 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

பிரான்சில், பாலியல் வன்கொடுமைக்கு அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகள் என்பது சுட்டுக்காட்டத்தக்கது.

இந்த தீர்ப்புக்கு எதிராக லு ஸ்கௌர்னெக் ஒருபோதும் மேல்முறையீடு செய்ய விரும்பவில்லைஎன்று அவரது வழக்கறிஞர்களில் ஒருவரான மாக்சிம் டெசியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலைக்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர் தண்டனையின் மூன்றில் இரண்டு பங்கையாவது அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

.