Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Ayngaran
படக்குறிப்பு, கன்னிப் பருவத்திலே திரைப்படத்தில் நடிகர் ராஜேஷ் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்த் திரையுலகில் தொடர்ந்து நடித்து வந்த ராஜேஷ் சில மறக்க முடியாத திரைப்படங்களில், குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்.
அவர் நடித்த சில முக்கியமான திரைப்படங்களைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. கன்னிப் பருவத்திலே (1979)
சினிமா வாய்ப்புகளைத் தேடி வந்த ராஜேஷுக்கு கே.பாலச்சந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அவரால் அதில் நடிக்க முடியவில்லை. இதற்குப் பிறகு, எஸ்.ஏ. ராஜ்கண்ணு தயாரித்த ‘கன்னிப் பருவத்திலே’ திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
இந்தப் படத்திற்கு கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத, பி.ஏ. பாலகுரு என்பவர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக வடிவுக்கரசி நடித்தார். கதாநாயகனான சுப்பைய்யா ஜல்லிக்கட்டுக் காளையை அடக்கச் செல்லும்போது, காயம் பட்டு குழந்தை பெறும் உடல் திறனை இழந்துவிடுகிறார்.
இந்த நிலையில், இவரது நண்பரான சீனு (கே. பாக்யராஜ்), நாயகனின் மனைவியை அடைய முயல்கிறார். இறுதியில் நாயகி, சீனுவை கொன்றுவிடுகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முதல் படத்திலேயே ஆண்மையை இழந்த ஆணாக நடிக்க வேண்டியிருந்தும், அந்தப் பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருந்தார் ராஜேஷ். படத்தின் இறுதியில், ‘இந்த ராத்திரிக்கு எந்த சாட்சியுமில்லை’ என்று கூறிவிட்டு, மனைவியை அணைத்தபடி செல்லும் காட்சி வெகுவாகப் பாராட்டப்பட்டது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.2. அந்த ஏழு நாட்கள் (1981)
கே. பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்த படம் இது. இந்தப் படத்தில் நாயகன் பாக்யராஜ்தான் என்றாலும் ராஜேஷுக்கு ஓர் அழுத்தமான பாத்திரம் கிடைத்தது.
திரைப்படங்களுக்கு இசையமைக்க விரும்பும் பாலக்காட்டு மாதவன், சென்னையில் ஒரு வீட்டில் குடியேறுகிறார். அந்த வீட்டில் இருக்கும் இளம் பெண்ணான வசந்தியை காதலிக்கிறார். ஆனால், வசந்தியின் பெற்றோர் அவரை ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை இழந்த ஆனந்துக்கு கல்யாணம் செய்து வைக்கின்றனர்.
ஆனால், வசந்தியோ தான் மாதவனை விரும்புவதை ஆனந்திடம் சொல்கிறார். இதனால், ஆனந்த் வசந்தியை மாதவனிடமே திரும்பிச் செல்லும்படி கூறுகிறார்.
மாதவன் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் கிளைமாக்ஸ். ஒரு கண்ணியமான கணவராக வடிவமைக்கப்பட்ட ஆனந்த் கதாபாத்திரத்தில் வந்த ராஜேஷின் நடிப்பு, இந்தப் படத்தில் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
பட மூலாதாரம், Srini Creations
படக்குறிப்பு, அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் ஆனந்த் கதாபாத்திரத்தில் நடிகர் ராஜேஷ் 3. அச்சமில்லை, அச்சமில்லை (1984)
கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட ராஜேஷுக்கு, பத்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்த முறை நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் “அச்சமில்லை, அச்சமில்லை”.
இந்தப் படத்தில் நாயகன் உலகநாதனாக நடித்தார் ராஜேஷ். நாயகன் என்றாலும் எதிர்மறை பாத்திரம்.
அரசியல் திரைப்படமாக வெளியான இந்தப் படத்தில் ராஜேஷின் நடிப்பு வெகுவாகக் கவனிக்கப்பட்டது. மேலும், இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ‘ஆவாரம் பூவு’, ‘ஓடுகிற தண்ணியில’ ஆகிய இரண்டு பாடல்களும் ராஜேஷுக்கு கவனிக்கத்தக்க பாடல்களாக அமைந்தன.
4. ஆலய தீபம் (1984)
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆலய தீபம். படம் பார்ப்பவர்களைக் கதறக் கதற அழவைத்த இந்தப் படத்தில், ராஜேஷ் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் முழுக்க ஒரு முறைகூட சிரிக்காமல் நடித்திருந்தார் என இதுகுறித்த விமர்சனம் ஒன்று குறிப்பிடுகிறது. மிகவும் பழைய பாணியில் உருவாகியிருந்த இந்தப் படத்தைத் தனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார் ராஜேஷ்.
பட மூலாதாரம், UGC
5. சிறை (1984)
ஆர்.சி. சக்தி இயக்கிய இந்தப் படத்தில் நடிகை லக்ஷ்மி நாயகியாகவும் ராஜேஷ் நாயகனாகவும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் மீண்டும் அந்தோணி என்ற எதிர்மறைப் பாத்திரத்தில் ராஜேஷ் நடித்தார். முரடனாகவும் கெட்டவனாகவும் இருக்கும் அந்தோணி, தனது பக்கத்து வீட்டில் குடியேறும் பாகீரதியை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகிறான்.
கணவன் அவளைப் பிரிந்து சென்றுவிட, அந்தோணியின் வீட்டில் குடியேறும் பாகீரதி, அந்த வீட்டைத் தனது சிறையாக மாற்றிக் கொள்கிறாள். அவளது இந்த நடவடிக்கை அந்தோணியை படிப்படியாக மாற்றுகிறது.
ராஜேஷின் உடல்வாகு, அந்தோணியின் பாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கும் எனக் கருதியதால், அவரை அந்தப் பாத்திரத்திற்குத் தேர்வு செய்ததாக அந்தப் படத்தை இயக்கிய ஆர்.சி. சக்தி ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
ராஜேஷ் நடித்த படங்களிலேயே இது மிகவும் குறிப்பிடத்தகுந்த படமாக அமைந்தது.
பட மூலாதாரம், SOCIAL MEDIA
6. சத்யா (1988)
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நாயகன் கமல்ஹாசன். கிட்டியுடன் சேர்ந்து ராஜேஷ் இந்தப் படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்தப் படத்தில் ராஜேஷுக்கு எம்.எல்.ஏ. மாரியப்பன் வேடம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ராஜேஷுக்கு கவனிக்கத்தக்க படமாக இந்தப் படம் அமைந்தது.
7. ஆட்டோகிராஃப் (2004)
நடிகர் ராஜேஷ், 80களின் பிற்பகுதியிலும் 90களிலும் பல படங்களில் நடித்திருந்தாலும், 2004இல் வெளிவந்த ஆட்டோகிராஃப் திரைப்படம்தான் அவரை மீண்டும் கவனிக்க வைத்தது.
சேரன் இயக்கி, நடித்த இந்தப் படத்தில் நாயகனின் தந்தையாக நடித்தார் ராஜேஷ்.
ஒரு கட்டத்தில் நாயகன் காதல் தோல்வியால், குடிக்க ஆரம்பிக்கவே வேதனைப்பட்டு, மகனை மாற்ற முயலும் தந்தையாக வந்த ராஜேஷ், கண்களைக் கசிய வைத்தார்.
இந்தப் படம் வெளியான பிறகு, 2005 மற்றும் 2006இல் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.
8. மெர்ரி கிறிஸ்துமஸ் (2024)
விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் நடித்திருந்த இந்தப் படம்தான் ராஜேஷ் நடித்த கடைசி திரைப்படம்.
ஒரு கொலை மர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், ராஜேஷுக்கு சிறிய ரோல்தான் என்றாலும் தனக்கே உரிய பாணியில் நடித்திருந்தார் அவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு