Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழ் தரப்புக்கள் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் நாள் தோறும் முட்டிமோதிவரும் நிலையில் தமிழரசுக்கட்சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர்களிடையே பேச்சுக்கள் நடபெறவுள்ளது.கதிரைகளை தக்கவைப்பது தொடர்பில் தமிழரசுக்கட்சி பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமிடையே பேச்சுக்கள் நடைபெறவுள்ளது.
இதனிடையே வவுனியா மாநகரசபை உட்பட சில சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்க சாதகநிலை காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
நாம் ஏனைய கட்சிகளுடன், சுயேட்சை உறுப்பினர்களுடனும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளோம். தனிப்பட்ட ரீதியாகவும் உறுப்பினர்களுடன் பேசியுள்ளோம்.
வவுனியாவில் சிங்கள பிரதேசசபை, வவுனியா மாநகரசபை, தெற்கு தமிழ் பிரதேச சபை மற்றும் மன்னாரில் முசலி, நானாட்டான் ஆகிய சபைகளில் நாம் ஆட்சியமைப்பதற்கான சாதகமான நிலமைகள் காணப்படுகின்றது.
எமது கொள்கைகளை ஏற்று செயற்படுபவர்களிடம் திறந்தமனதுடன் அழைப்பு விடுக்கின்றோம். எமது கொள்கைகள், சிந்தனைகள் கட்சியின் விழுமியங்களுக்கு ஏற்ற வகையில் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினால் நிச்சயமாக அவர்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க நாங்கள் காத்திருக்கின்றோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது உள்ளூராட்சி மன்றங்களூடாக பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றது.
எமது ஆட்சியில் இனமத மொழி பேதத்திற்கு இடமில்லை. வவுனியாவில் மூன்று இன மக்களும் இருக்கின்றனர். அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் இருக்கின்றனவெனவும் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்