பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்3 மணி நேரங்களுக்கு முன்னர்

இன்றைய (28/05/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள சில செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

தாய்லாந்து, மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் ஆமைக் குஞ்சுகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், “பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு கடந்த 24ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பேர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்குச் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பெட்டிகள், உடைமைகளை போலீசார் கைப்பற்றிச் சோதனை நடத்தினர். அதில் சிவப்பு நிறக் காதுகளைக் கொண்ட அரிய வகை ஆமைக் குஞ்சுகள் இருந்தன. இந்த வகை ஆமைகள் இந்தியாவில் இல்லை என்று கூறப்படுகிறது. இவை எந்த ஆவணங்களும் இன்றி கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவர்கள் பெங்களூருவை சேர்ந்த பாலசுப்ரமணிய சண்முகம், விஜயராகவன் தனபால் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 2 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கைப்பற்றப்பட்டன,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இதே போல் கடந்த 25ஆம் தேதி மலேசியாவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த ஒரு பயணியை விமான நிலைய அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தபோது அவரிடம் 1000 ஆமை குஞ்சுகள் இருப்பது தெரிய வந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

“அவை தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த ஆமை வகையாகும். சட்டவிரோதமாக ஆமைக் குஞ்சுகளைக் கொண்டு வந்த அவர், அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் பெங்களூருவை சேர்ந்த அருண்குமார் நாராயணசாமி என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 1000 ஆமைக் குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூரில் 72 பாகிஸ்தான் ராணுவ நிலையங்கள் அழிப்பு: எல்லை பாதுகாப்புப் படை தகவல்

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலையங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்துள்ளது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில், இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எஃப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மே 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து சுமார் 50 தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றனர்.

அது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. தானியங்கி ராக்கெட் லாஞ்சர் மூலம் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசினோம். இதன் மூலம் 2,100 மீட்டர் தொலைவு வரையிலான இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கி அழித்தோம்” என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், IANS

மேலும் விளக்கிய அவர், “2.7 எம்எம் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பயன்படுத்தி பாகிஸ்தான் ராணுவ டாங்கிகள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினோம். நடுத்தர இயந்திரத் துப்பாக்கி மூலம் பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தத் துப்பாக்கிகளால் ஒரு நிமிடத்தில் 600 முதல் 1000 குண்டுகளைச் சுட முடியும். ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 72 ராணுவ நிலைகள் முழுமையாகத் தகர்க்கப்பட்டன.

கடந்த 10ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய டிரோன் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் மரணம் அடைந்தனர். அவர்களது பெயர்களை எல்லையில் உள்ள இரண்டு நிலையங்களுக்கு சூட்ட முடிவு செய்துள்ளோம். சம்பா பகுதியில் ஒரு நிலையத்திற்கு சிந்தூர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது,” என்று அவர் தெரிவித்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

இவற்றோடு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதல் வீடியோவை அவர் வெளியிட்டார். இந்த வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ நிலைகள் தீப்பற்றி எரியும் காட்சிகள், இந்திய எல்லையில் இருந்து குண்டுகள் சீறிப்பாயும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட வித்வன் ஸ்க் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் செய்தியாளர்களிடம் காண்பித்து செயல் விளக்கம் அளித்தனர்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு