புதிதாக திருமணமானவரா? தேனிலவோடு காப்பீட்டையும் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், நாகேந்திரசாயி குந்தவரம்பதவி, வணிக ஆய்வாளர், பிபிசிக்காக2 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒரு திருமணத்தைப் பற்றி நினைக்கும் போது புதிய வீடு, புதிய பொருட்கள், உடைகள் மற்றும் நகைகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அதையெல்லாம் விட எதிர்காலத் திட்டமிடல் மிக முக்கியமானது.

இருவரும் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பேசித் திட்டமிட வேண்டும். எதிர்பாராத ஒரு பிரச்னையை சந்தித்தால், அதை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றி பேச வேண்டும். மிக முக்கியமாக, புதுமணத் தம்பதிகள் தங்களுக்கான காப்பீடு குறித்து முதலில் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

எதிர்பாராத மருத்துவ அவசரநிலை, பிரசவத்தின் போது ஏற்படும் சிக்கல் போன்றவற்றை சமாளிக்க புதிதாக திருமணமாவர்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம். திருமணத்திற்காக நிறைய பணம் செலவழித்த இருதரப்பு குடும்பத்துக்கும் இது ஒரு பெரிய பிரச்னையாக மாறும்.

மருத்துவ காப்பீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் மருத்துவச் செலவுகளுக்குத் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.திருமணத்திற்குப் பிறகு குடும்பம், வீடு, கார், குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வு என பல கட்டங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. இங்குதான் நாம் குறிப்பாக சுகாதாரம், மகப்பேறு மற்றும் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கிறோம்.

நிதி ஆயோக் சுகாதார பதிவுகள் 2023 தரவுகளின்படி, சிறு நகரங்களில் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஆண்டுக்கான மருத்துவ செலவு, ரூ 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை உள்ளது. அதுவே பெரு நகரங்களில் இந்த செலவு ரூ 75 ஆயிரத்திலிருந்து 1 லட்சம் வரை இருக்கலாம்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தனியார் மருத்துவமனைகளில் பிரசவத்துக்கான சராசரி செலவு ரூ 60 ஆயிரத்திலிருந்து 1.5 லட்ச ரூபாய் வரை இருக்கும். சிசேரியன் மூலம் குழந்தை பெற்றால், அதற்கான செலவு ரூ 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை ஆகும். பின்னர் குழந்தைக்கான தடுப்பூசிகள் செலவுகளும் உள்ளன.

நிதி ஆயோக்கின் 2021-22 தரவுகளின்படி, இந்தியாவில் மருத்துவச் செலவுகளுக்குத் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

பாலிசி பஜார் டேர்ம் இன்சூரன்ஸ் 2023 ஆய்வின்படி, இந்தியாவில் 25-35 வயதுக்குட்பட்ட இளம் தம்பதிகளில் 70 சதவீதம் பேருக்கு டேர்ம் இன்சூரன்ஸ் இல்லை.

இந்தியாவில் 3 சதவீத மக்கள் மட்டுமே காப்பீடு வைத்துள்ளார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உங்களிடம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட காப்பீடு இருந்தாலும், நிபுணர்கள் தனிப்பட்ட காப்பீட்டை எடுக்க பரிந்துரைக்கின்றனர்.வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள காப்பீடு

இதுதான் நம்மில் பெரும்பாலோர் சொல்லும் முதல் காரணம். ஏதெனும் காப்பீடு எடுத்துள்ளீர்களா என கேட்டால், கம்பெனியில் காப்பீடு இருக்கும்போது மற்றொரு காப்பீடு எதற்கு என கேட்பார்கள்.

குறிப்பாக கணவன் மனைவி இருவரும் வேலை செய்தால், அவர்கள் அதிக தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள்.

ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.

உங்கள் காப்பீட்டிற்கும் உங்கள் வேலைக்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது.

நீங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணியில் இருக்கும் வரை இந்தக் காப்பீடு நீடிக்கும். நீங்கள் பணியில் இருந்து விலகும் நாளில், காப்பீடும் முடிந்துவிடும்.

நீங்கள் நாற்பது அல்லது ஐம்பது வயதிற்குப் பிறகு பணி செய்வதை நிறுத்தினால்,புதிய காப்பீட்டை எப்படி பெறுவது? உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் உடல்நல சிக்கல்கள் இருந்தால் என்ன செய்வது? நீங்கள் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும்? காத்திருப்பு காலம் போன்றவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

குழு காப்பீடு திட்டங்கள் பொதுவாக OPD(மருத்துவர் ஆலோசனை, மருத்துவமனை படுக்கையில் சேராமல் சிறு உடல் நல பாதிப்புக்கான சிகிச்சை) செலவுகளை உள்ளடக்காது.

சில காப்பீடு நிறுவனங்களை இவற்றை உள்ளடக்கினாலும், அவர்கள் அளிக்கும் தொகையை விட நீங்கள் அதிகம் செலவு செய்யும் சூழல் ஏற்படும்.

பட மூலாதாரம், Getty Images

என்ன செய்ய வேண்டும்?

அதனால்தான் புதுமணத் தம்பதிகள் family floater இன்ஸுரன்ஸ் காப்பீட்டை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. 30 வயதுக்குட்பட்ட ஒரு தம்பதியினர், 10 லட்ச ரூபாய்க்கு family floater காப்பீட்டை எடுத்தால் பிரீமியமாக ஆண்டுக்கு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை செலுத்த வேண்டியிருக்கும். வயது அதிகமானால், பிரீமியம் தொகையும் அதிகமாகும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மகப்பேறு காப்பீடு

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் புதுமணத் தம்பதிகளுக்கு ஏற்படும் முதல் பெரிய செலவு பொதுவாக கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடையதாக இருக்கும். இருப்பினும், பல காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியை எடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் மகப்பேறுக்கு காப்பீட்டை பயன்படுத்த அனுமதிக்கின்றன

அதனால்தான் குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதற்கு முன்பு காப்பீட்டைத் திட்டமிட வேண்டும். இதில் மகப்பேறு காப்பீடு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். கூடுதலாக, முழு மகப்பேறு செலவும் உள்ளடக்கப்படுமா அல்லது அதற்கு ஏதேனும் வரம்பு உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

இவற்றை நினைவில் கொள்ளுங்கள்

மகப்பேறுக்கு காப்பீட்டை பயன்படுத்த காத்திருப்பு காலம் 24-48 மாதங்கள்அதிகபட்ச காப்பீட்டு வரம்பு – ரூ. 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை.பொதுவாக 30 வயதிற்குப் பிறகு மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.சுக பிரசவத்துடன் சிசேரியனையும் அனுமதிக்கும் காப்பீட்டை தேர்ந்தேடுக்க வேண்டும்.பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய பரிசோதனைகளுக்கான செலவுகள் உள்ளடக்கப்படுமா என்று சரிபார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுவதற்கு முன்பு காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுவதை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.ஒபிடி காப்பீடு

இன்றைய காலகட்டத்தில் மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றம் மிகவும் அதிகரித்துள்ளது. ஒரு பெரிய உடல்நல பிரச்னை இருந்தாலும், 24 மணி நேரத்திற்குள் அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படும் காலம் வந்துவிட்டது.

இதன் மூலம், காப்பீட்டுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 24 மணிநேரம் உள்நோயாளியாக இருக்க வேண்டும் என்ற விதிகள் படிப்படியாக மாறி வருகின்றன.

அதனால்தான் உங்கள் பாலிசி வெளி நோயாளி பிரிவு சிகிச்சைக்கும் (OPD) காப்பீட்டை வழங்குகிறதா என்பதை சரிபார்க்க வேண்டும். நகர்ப்புறங்களில் வேலை செய்யும் தம்பதிகளுக்கு இது மிகவும் முக்கியமானது.

நள்ளிரவில் வயிற்று வலி போன்ற பிரச்னைகளை மருத்துவ சிகிச்சை மூலம் சில மணி நேரங்களுக்குள் தீர்க்க முடியும். இதுபோன்ற சூழலில் OPD சிகிச்சைக்கான காப்பீடு பயனுள்ளதாக இருக்கும்.

இவற்றைத் தவிர, பல், தோல் போன்ற சிகிச்சைகளுக்கு மருத்துவமனையில் அனுமதி தேவையில்லை. இவை அனைத்தும் பாலிசியில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

இவை உள்ளடக்கப்படுமா இல்லையா? என்பதைப் பார்க்க வேண்டும்.

OPD-யில் மருத்துவர் ஆலோசனைகள்பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு பெரிய உடல்நல பிரச்னை இருந்தாலும், 24 மணி நேரத்திற்குள் அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டு நோயாளி வீட்டிற்கு அனுப்பப்படும் காலம் வந்துவிட்டதுகருவுறுதலுக்கு காப்பீடு

தாமதமான திருமணங்கள், மாறி வரும் வாழ்க்கை மூறை போன்றவை கருவுறுதல் விகிதம் குறைவதற்கான ஒரு காரணமாக உள்ளது. இந்தநிலையில்தான் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் அதிகரித்து வருவதை பார்க்கிறோம்.

சில நிறுவனங்கள் தங்களது பாலிசியில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையையும் உள்ளடக்குகின்றன.இருப்பினும், பாலிசி விதிமுறைகள் குறித்து நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அவற்றின் பிரீமியங்களும் அதிகமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில நிறுவனங்கள் தங்களது பாலிசியில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையையும் உள்ளடக்குகின்றனடேர்ம் இன்சூரன்ஸ்

அனைவருக்கும் டேர்ம் இன்சூரன்ஸ் மிகவும் முக்கியமானது.

நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், நம் துணைக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது நமது பொறுப்பு. அதனால்தான் முதலில் மருத்துவ காப்பீடு பின்னர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுப்பது முக்கியம்.

முப்பது வயதுக்குட்பட்டவர்கள், ஒரு கோடி ரூபாய் டேர்ம் இன்சூரன்ஸுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூபாய் 10-12 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்.

வீட்டுக் கடன் வைத்திருப்பவர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கத் தவறக்கூடாது. ஏனெனில் துரதிர்ஷ்டவசமாக சுமார் 20 ஆண்டுகள் நீடிக்கும் கடன் காலத்தில் வாழ்க்கைத் துணை இறந்துவிட்டால், அந்தச் சுமை மற்றொருவர் மீது விழும்.

காப்பீடு என்பது நமக்காகவும் நம் குடும்பங்களுக்காகவும் நாம் உருவாக்கும் ஒரு நிதிக் கேடயமாகும். இதை விட பெரிய பரிசு ஏதாவது இருக்கிறதா?

(குறிப்பு: இந்த விவரங்கள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. நிதி விஷயங்கள் தொடர்பாக நீங்கள் எடுக்க விரும்பும் எந்த முடிவுகளுக்கும் நிபுணர்களை அணுகலாம்)

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு