முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினரால் ல் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல   சம்பந்தப்பட்ட வழக்குகளில் சந்தேக நபராகப் பெயரிட ரமித் ரம்புக்வெல்ல      நேற்று (20) இலஞ்ச ஊழல்  வழக்கு தொடா்பில்  நீதிமன்றத்தால் சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி ரமித் ரம்புக்வெல்ல இன்று (21) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையான போது கைது செய்யப்ப்ட் ட அவரை   ஜூன் 3 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு , கொழும்பு பிரதான நீதவான்  இன்று  (21)  உத்தரவிட்டுள்ளார்.