நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம். ஆனால் 6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் பொய்யை மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். இந்த தேர்தலில் பொதுஜன பெரமுனதான் சவால்களுக்கு மத்தியில் வெற்றிப்பெற்றுள்ளது என்று மகிழ்வுடன் குறிப்பிட வேண்டும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம்.
ஆனால் இந்த தேர்தலில் சுமார் 9 இலட்சத்து 54 ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம்.
எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்து உள்ளுராட்சிமன்ற நிர்வாகத்தை அமைப்பது தொடர்பில் கட்சியின் அரசியல் குழு கூடி சிறந்த தீர்மானத்தை எடுக்கும் என்றார்.