Home இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 12 பேர் படுகாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; 12 பேர் படுகாயம்

by ilankai

ஆதீரா Thursday, May 08, 2025 இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில், 12 பேர் காயமடைந்த நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வான் ஒன்று , கனரக வாகனத்துடன் மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை முலட்டியன பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலிம்பட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Related Posts

இலங்கை

Post a Comment

Related Articles