கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக வேண்டுமென்றே தனக்குத்தானே பாம்பு விஷத்தை செலுத்திக் கொண்ட ஒரு அமெரிக்கரின் இரத்தம், ஒப்பிடமுடியாத விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்க வழிவகுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
டிம் ஃப்ரைடின் இரத்தத்தில் காணப்படும் ஆன்டிபாடிகள், விலங்கு சோதனைகளில் பல்வேறு உயிரினங்களிலிருந்து வரும் அபாயகரமான அளவுகளிலிருந்து பாதுகாப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
தற்போதைய சிகிற்சைகள் பாம்பு கடித்த ஒருவருக்கு குறிப்பிட்ட பாம்பின் விசத்துடன் பொருந்தப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் திரு. ஃபிரைடின் 18 ஆண்டுகால பணி, அனைத்து பாம்புக்கடிகளுக்கும் எதிரான உலகளாவிய விஷ எதிர்ப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக இருக்கலாம்.
பாம்புக்கடியில் உலகலாவிய ரீதியில் 14,000 பேர் உயிரிழக்கின்றனர். இந்த உயிரிழப்பு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பலருக்கு உடல் உறுப்புகளை துண்டிக்க வேண்டிய நிலை அல்லது ஊனமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில், ஃப்ரைட் உலகின் மிக கொடிய பாம்புகளில் சிலவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட கடிகளையும் 700க்கும் மேற்பட்ட விஷ ஊசிகளையும் தயாரித்துள்ளார். வற்றில் பல வகையான மாம்பாக்கள், நாகப்பாம்புகள், தைபான்கள் மற்றும் கிரெய்ட்கள் அடங்கும்.
பாம்புகளைக் கையாளும் போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள தனது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள அவர் ஆரம்பத்தில் விரும்பினார். இதனை தனது யூடியூப்பில் ஆவணப்படுத்தினார்.
ஆனால், அடுத்தடுத்து இரண்டு நாகப்பாம்புகள் கடித்ததால் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
நான் இறக்க விரும்பவில்லை. ஒரு விரலை இழக்க விரும்பவில்லை. வேலையை இழக்க விரும்பவில்லை என ஃபிரைடின் கூறினார்.
உலகின் பிற பகுதிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை உருவாக்குவதே தனது நோக்கம் என்று கூறினார்.