4
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்க்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் குறைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு முன்னாள் ஜனாதிபதி தற்போது ஒரு தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதாக தெரியவருகின்றது.
இந்த விடயம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணியாளர் ஒருவர் தெரிவிக்கையில்
முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட நான்கு தொலைபேசிகளில் மூன்று தொலைபேசிகள் அகற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஊழியர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.