Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
போர்க்குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள படையினரை தண்டிப்பது தேசிய மக்கள் சக்தியின் இன நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கின்றது.
அவ்வகையில் பிரிட்டனின் தடை தொடர்பில், அத்தகைய இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரிட்டிஸ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக்கிடம் இன்று புதன்கிழமை (26) தெரிவித்துள்ளார்.
“இலங்கை உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கான பிரிட்டனின் தடைகள்” என்ற தலைப்பில் பிரிட்டன், வெளிநாட்டு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
பிரிட்டன் அரசாங்கம் நான்கு நபர்கள் மீது தடைகளை விதித்துள்ளது, அவர்களில் மூன்று பேர் இலங்கை ஆயுதப் படைகளின் முன்னாள் இராணுவத் தளபதிகள்.மற்றையவர் கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் ஆவார்
“பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட உறுதிமொழியை”; கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனினும் பிரிட்டன் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும், அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதை இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அடிக்கோடிட்டுக் காட்ட விரும்புகிறது.
அத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடந்து வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது, அதனை சிக்கலாக்குகின்றன. பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டு வழிமுறைகளை வலுப்படுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது, மேலும் கடந்த கால மனித உரிமை மீறல்கள் உள்நாட்டு பொறுப்புக்கூறல் வழிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத குறிப்பிட்டுள்ளார்.