Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஏதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது தேர்தல் தெரிவத்தச்சியாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டுபணங்களோ வேட்புமனுக்கள் செலுத்த முடியாது செலுத்த முடியாது என கிளிநொச்சி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலருமாகிய எஸ். முரளிதரன் ஊடக சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தேர்தல் ஆணைக்குழுவால் விடுக்கப்பட்ட அறிவிப்பின் பிரகாரம் மன்னார் மற்றும் பூநகரி உட்பட 4 சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படவில்லை.
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்திருப்பதால் அச்சபைக்கான தேர்தல் இப்போது நடைபெறாது.
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கே இப்போது தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பட்டியலில் மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களே இப்போது அறிவிக்கப்படவில்லை.
நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற காரணத்தால் தேர்தல் அறிவிப்புகள் இந்தச் சபைகளுக்கு விடப்படவில்லை.
2023 இல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன.
தற்போது கடந்த ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டு விட்டமையால் அந்த வழக்குகளை விலக்கிக் கொள்ளும்படி கோரி நகர்த்தல் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தேர்தல் திணைக்களத்தால் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும் அவற்றுக்கும் வேட்புமனுக்கள் கோரி அவற்றுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில் நாடு முழுவதும் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை தேர்தல் ஆணைக் குழு மேற்கொண்டு இருப்பதாகத் தெரிகின்றது.
கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை அந்த மாநகர சபையின் எல்லை நிர்ணயம் மீளச் செய்யப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அது முடிந்த பின்னரே அங்கு தேர்தல் முன்னெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.