Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
துருக்கியில் 40 ஆண்டுகால சுதந்திர போராட்டத்தை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள் இன்று சனிக்கிழமை போர்நிறுத்தத்தை அறிவித்தனர். கடந்த 20 வருடங்களுக்க மேலாக சிறையில் (1999 ஆண்டு முதல்) துருக்கிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குர்திஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் அப்துல்லா ஓகலான் (Abdullah Öcalan) ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு போராட்டத்தை கைவிடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு நாள் கழித்தது இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) அறிக்கை ஒன்றில் இந்த போர் நிறுத்தத்தை அறிவித்தது.
அமைதி மற்றும் ஜனநாயக சமூகத்திற்கான தலைவர் அப்போவின் அழைப்பை செயல்படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில் இன்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக நாங்கள் அறிவிக்கிறோம். எங்கள் மீது தாக்குதல் நத்தப்படாவிட்டால் எங்கள் படைகள் எதுவும் ஆயுதமேந்திய நடவடிக்கை எடுக்காது என்ற அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துருக்கிக்கும் பி.கே.கே-க்கும் இடையிலான மோதல் 1984 இல் தொடங்கியதிலிருந்து பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது. கடந்த வியாழக்கிழமை குர்திஷ் அரசியல்வாதிகளின் ஒரு குழு, அதே நாளின் தொடக்கத்தில் தீவு சிறையில் உள்ள அப்துல்லா ஒகலானைச் சந்தித்த பின்னர், பி.கே.கே தனது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்ற ஓகலானின் அழைப்பை அறிவித்தது.
2015 கோடையில் PKK மற்றும் அங்காரா இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, மோதலில் ஒரு முறிவின் முதல் அறிகுறியாக இந்த போர் நிறுத்தம் உள்ளது.
குர்திஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் ஒரு புதிய வரலாற்று செயல்முறை தொடங்கியுள்ளது என்பதை ஓகலானின் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக PKK தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குர்திஸ்தான் என்பது துருக்கி, ஈராக், சிரியா மற்றும் ஈரானின் குர்துகள் வசிக்கும் பகுதிகளைக் குறிக்கிறது.
எங்கள் சொந்தத் தரப்பிலிருந்து வரும் அழைப்பின் தேவைகளுக்கு இணங்கி செயல்படுத்தப்படும் என்று கூறிய PKK, ஜனநாயக அரசியல் மற்றும் சட்ட அடிப்படைகளும் வெற்றிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
மர்மாரா கடலில் அமைந்துள்ள இம்ராலி சிறையில் இருந்து ஒகலானை விடுவிக்க வேண்டும் என்றும், போராளிகள் ஆயுதங்களை கீழே போட வழிவகுக்கும் ஒரு கட்சி தனிப்பட்ட முறையில் வழிநடத்தி செயல்படுத்த வேண்டும் என்றும் அந்தக் குழு அழைப்பு விடுத்தது.