Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உக்ரைன் போர் குறித்த அவசர உச்சிமாநாட்டிற்காக ஐரோப்பிய தலைவர்கள் நாளை கூட உள்ளனர்.
அமெரிக்கா ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்கோ ரூபியோ, வரும் நாட்களில் சவுதி அரேபியாவில் ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைனில் நடக்கும் போர் நிலைமை குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசிய சில நாட்களுக்குப் பின்னர் இது வந்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒப்புக் கொண்ட எந்தவொரு இருதரப்பு ஒப்பந்தத்தையும் ஏற்கப் போவதில்லை என்றும் பலமுறை கூறியுள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா சவுதி அரேபியாவிற்கு ஒரு குழுவை அனுப்புகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உட்பட வெள்ளை மாளிகையின் மூத்த பிரமுகர்கள் , வரும் நாட்களில் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
உக்ரைனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டிற்கு அத்தகைய அழைப்பு வரவில்லை என்று கூறுகிறார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்குக்கான அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
உக்ரைனுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் கீத் கெல்லாக், வாஷிங்டன், மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று கூறினார். ஆனால் ஐரோப்பா அழைக்கப்படவில்லை.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் ரூபியோ பேசினார். அவர் உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான டிரம்பின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவும் இங்கிலாந்தும் ஓரங்கட்டப்படலாம் என்ற கவலை உள்ளது. அந்த பயம்தான் நாளை பாரிஸில் அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாட்டிற்கு வழிவகுத்தது.
இந்தக் கூட்டத்தை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூட்டுவார்.
இது நமது தேசிய பாதுகாப்பிற்கு ஒரு தலைமுறைக்கு ஒரு முறை நிகழும் தருணம் என்று முன்னர் பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் கூறினார். அந்த மாநாட்டில் அவரும் கலந்து கொள்வார்.