Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தையிட்டி விகாரையை இடிக்க தமிழ் மக்களை அணிதிரளுமாறு தான் அழைப்பேதும் விடுக்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களின் தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதன் பின்னர் – ‘விகாரையை இடிக்க வாரீர்’ என்று நான் அழைப்பு விடுத்தது போன்ற விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அவ்விடயத்தை அறிந்த உடனேயே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக, செய்தி போலியானது என பதிவிட்டதுடன், ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனிடையே நாளை புதன்கிழமை போயா தினத்தில் பெருமளவு சிங்கள பௌத்தர்கள் விகாரைக்கு வழிபாட்டிற்கு வருகை தரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் இடித்தழிப்பு அழைப்பு தொடர்பில் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 14 ம் திகதிக்கு அழைப்புக்கட்டளை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு இன்று நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.