வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி தப்பியோட்டம் !

by admin

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைச்சாலை கைதி தப்பியோட்டம் ! on Thursday, May 09, 2024

களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலை கைதியொருவர் பொலிஸ் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வாதுவை, தெல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.

இவர் கடந்த ஏப்ரல் மாதம் 2,300 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்து குற்றச்சாட்டில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில், இவர் கடந்த 6ஆம் திகதி அன்று சிறைச்சாலையில் உள்ள மற்றுமொரு கைதியொருவருடன் தகராறில் ஈடுபட்டுக் காயமடைந்த நிலையில் களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, இவர் கழிவறைக்குச் செல்வதாகக் கூறி வைத்தியசாலை கழிவறையின் ஜன்னல் வழியாகத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்