மட்டக்களப்பு சங்கர்புர மக்களின் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நிறைவேற்றம்.

by admin

மட்டக்களப்பு சங்கர்புர மக்களின் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் நிறைவேற்றம். on Thursday, May 09, 2024

(சித்தா)

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான சங்கர்புர மக்கள் தமது கிராமத்தில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக இரவு நேரங்களில் வைத்தியசாலை போன்ற அவசர தேவைகளுக்குக் கூட வெளியில் நடமாட முடியாது பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுவதாகவும் தெருவிளக்குகளைப் பொருத்தித் தருவதன் மூலம் ஓரளவு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளமுடியும் எனும் கோரிக்கையினை முன் வைத்திருந்தனர்.

இந்த வகையில் ‘மக்களைத் தேடி நாம்’ எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அப் பகுதி மக்களுக்கு இன்று ஒரு தொகுதி தெருவிளக்குகளுக்கான உபகரணங்கள் போரதீவுப்பற்றுப் பிரதேசக் குழுத் தலைவர் தயானந்தன் அவர்களால் வழங்கி சங்கர்புர மக்களின் கோரிக்கை நிறைவு செய்யப்பட்டது. இதன் போது கட்சியின் கிராமிய குழு உறுப்பினர்கள், பொது அமைப்புகளின் உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்திகள்