கபடிப் போட்டிக்காக நேபாளம் செல்லும் இலங்கை வீராங்கனை

by admin

மாலை சந்தை மைக்கல் வியைாட்டுக்கழக வீராங்கனை பிரியவர்ணா இலங்கை அணிக்காக நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட பயணமாகவுள்ளார்.

கரவெட்டி பிரதேசத்தில் உள்ள மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வீராங்கனையும், தேசிய கபடி அணி தெரிவில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை கடற்படை அணி வீராங்கனையுமான இ – பிரியவர்ணா நேபாளத்தில் நடைபெறவுள்ள கபடி போட்டியில் விளையாட்டுவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சிறு வயது முதல் யா / நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் மாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழகத்திற்காக மாவட்டம் மாகாணம் தேசிய ரீதியான போட்டிகளில் பல திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்