முன்னாள் இராணுவ வீரர்களை ரஷ்யா, உக்ரைன் யுத்தத்திற்கு மனிதக் கடத்தல்: இலங்கை கடற்படை எச்சரிக்கை !

by admin

முன்னாள் இராணுவ வீரர்களை ரஷ்யா, உக்ரைன் யுத்தத்திற்கு மனிதக் கடத்தல்: இலங்கை கடற்படை எச்சரிக்கை ! on Wednesday, May 08, 2024

முப்படைகளிலும் பணியாற்றி ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்குச் சுற்றுலா விசா மூலம் அழைத்துச் சென்று கூலிப்படைகளில் அமர்த்தும் மனிதக் கடத்தல் செயற்பாடு இடம்பெறுவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில் சிலர் யுத்தத்தில் பலத்த காயமடைந்து ஆதரவற்ற நிலையில் பரிதாபமாக உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மனித கடத்தல் செயற்பாடு தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0117192142 அல்லது 0117192250 என்ற இலங்கை கடற்படைத் தலைமையக தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் வழங்குமாறு இலங்கை கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்