பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு !

by admin

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு !

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று போரட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இன்று நண்பகல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் ஐயாயிரம் கல்விசாரா ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்திருந்த பகுதிக்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கலகத்தடுப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்ததுடன் நீர்த்தாரை இயந்திர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

எனினும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியவாறு தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பினால் கல்விச் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்