பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தாக்குதல் – ஒருவர் கைது

by admin

பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதியத்தலாவ, சரணகம பிரதேசத்தில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறில் மற்றைய தரப்பினர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தாக்கிய நபர் ஒருவர் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்