கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை!

by admin

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசா வழங்கும் நடைமுறையில் ஏற்பட்ட குழப்ப நிலைமை காரணமாக பயணிகள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.

குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

விமான பயணிகள்
எனினும் நேற்றையதினம் கணினிகளை சரியாக செயற்படுத்த முடியாமையினால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

நீண்டநேரம் காத்திருந்தமையை அடுத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

அங்கிருந்து பயணிகள் கடும் கோபமாக அதிகாரிகளுடன் வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்