இலங்கை துறைமுகத்திற்கு முதன் முறையாக வந்த சொகுசு கப்பல்!

by admin

இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதல் முறையாக ‘Serenade of the Seas’ எனும் உல்லாசக் கப்பல் ஒன்று வருகை தந்துள்ளது.

குறித்த சொகுசு கப்பல் கடந்த திங்கட்கிழமை (29-04-2024) அன்று வருகை தந்துள்ளது.

இந்த கப்பலில் 1,950 பயணிகள் மற்றும் 890 பணியாளர்கள் வருகை தந்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 10வது கப்பல் இதுவாகும்.

கடந்த 2003 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல் பயணத்தை ஆரம்பித்த ‘செரினேட் ஒப் தி சீஸ்’ கப்பலை சர்வதேச ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதேவேளை குறித்த கப்பல் அடுத்த பயணத்தை கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்