குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றத்தில் தாய் கைது

by admin

ராகம பிரதேசத்தில் 9 மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். 

குழந்தையை யாரோ எடுத்துச் சென்றதாக குழந்தையின் தந்தை நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குழந்தையின் வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்த வேளை குழந்தையை தாய் கிணற்றில் போட்டது தெரியவந்ததுள்ளது. அதனை அடுத்து தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அதே பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்