இந்திய ஆட்சி முறையே வேண்டும்

by admin

இந்திய ஆட்சி முறையை கொண்டு வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை கொண்டு வருவது தொடர்பில் இவர்களது செயற்பாடு மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எவருக்கு தகுதி இருக்கிறது.

கள்ள வாக்குக்கள் மூலம் பாராளுமன்றம் சென்ற 22 பேர்களில் ஒருவரா ? யாரை நிறுத்துவது ? இவர்கள் இன்று தேசிய தலைவர்கள் ஆனால் ஆனந்தசங்கரி இன்று தேசிய துரோகி ஆகிவிட்டார். 

நான் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க மாட்டேன்.

என்னுடைய தீர்வு சிங்கள மக்களால் பெரும் அளவில் ஏற்கப்பட்ட தீர்வு இந்திய அரசியல் முறையை போன்று இலங்கை அரசியல் முறை அமைய வேண்டும் அது எனது எதிர்பார்ப்பு என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்