சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கைது !

by admin

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கைது ! on Sunday, April 21, 2024

யாழ்ப்பாணம் – கிழக்கு மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக இரவு வேளையில் கடல் அட்டைகளை பிடித்த நால்வர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட நால்வரும் வெற்றிலைக்கேணி கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may like these posts

தொடர்புடைய செய்திகள்