அம்பாறை கடற்பரப்பில் சடலம் ஒன்று மீட்பு!

by admin

அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு கல்முனை எல்லை வீதி பகுதியில் உள்ள கடற்கரையோரப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்று (2024.02.12) பொதுமக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து விசாணைகள் மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸார் விசாரணை பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு வருகை தந்த பெரிய நீலாவணை பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்