Homeசெய்திகள்

வீட்டில் ஹஸீஷை வைத்திருந்த 31 வயது பெண் கைது

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக

முஸ்லிம் திருமண சட்டத்தை திருத்த பாராளுமன்றில் யோசனை சமர்ப்பிக்கப்பட்டது.
நிலக்கரி டெண்டர் தொடர்பான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை !
நாட்டில் மீண்டும் மக்கள் கிளர்ந்தெழுவார்கள், ராஜபக்ஷ அரசு போல் இந்த அரசும் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும்


பொரலஸ்கமுவ பிரதேசத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி காலை நடத்தப்பட்ட சோதனையின் போது, பெருமளவிலான போதைப்பொருட்களுடன் 31 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.நிர்மலா மாவத்தையில் உள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, சந்தேக நபரிடம் இருந்து 17 கிலோ கிராம் ஹாஷிஷ் மற்றும் 400 கிராம் குஷ் போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.போரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணுக்கு எதிராக நான்கு பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.