தித்வா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தல் !

Homeசெய்திகள்Design

தித்வா புயல் பாதிப்புகளைச் சீரமைக்க ஒருங்கிணைந்த திட்டமிடல் அவசியம் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் வலியுறுத்தல் !

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார். அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆச..

உங்கள் மொழியில் பேசலாம் எனக்கூறும் அரசாங்கமே அவ்வுரிமையை மறுக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் ; கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவுக்கு விளக்கமறியல் நீடிப்பு !
இன்றைய வானிலை
தபால் பெட்டிக்கு அருகில் சடலம் மீட்பு !
எப்ஸ்டீன் ஆவணங்களில் இலங்கை 180க்கும் மேற்பட்ட முறை குறிப்பு

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீர்செய்து, நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் ஜனாதிபதி பணிக்குழுவின் திட்டங்களுக்கு அமைவாக, நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தெரிவித்தார்.
அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (06) அன்று பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இதில் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் இக்கூட்டத்தில் சேதங்கள் மற்றும் இழப்புகளின் ஆரம்ப மதிப்பீடுகள், மீட்புத் தேவைகளுக்கான நிதி கணக்கீடு மற்றும் சர்வதேச அபிவிருத்திப் பங்காளிகள் வழங்கவுள்ள ஆதரவின் தன்மை குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் குடியிருப்பு ஒருங்கிணைப்பாளர், ஐரோப்பிய ஒன்றியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர்,
ஜனாதிபதி பணிக்குழுவின் கீழ் இயங்கும் எட்டு உபகுழுக்களில் ‘அனர்த்தத்திற்கு பிந்தைய தேவைகள் மதிப்பீட்டுக் குழுவே’ முதன்மையானது.
இந்தக் குழுவின் தலைமையின் கீழ் ஏனைய குழுக்கள் மேற்பார்வை செய்யப்படுவதுடன், ‘மீளக் கட்டியெழுப்பும் இலங்கை’ திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கு இந்த மதிப்பீடு மிக முக்கியமானது.
தித்வா புயலால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் சமூகத் தாக்கங்கள் ஆகியவற்றை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய அதிகாரிகள் முறையாகப் பகுப்பாய்வு செய்வது அவசியம்.
அவசர நிவாரணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது நீண்டகால மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புக்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டிற்கு அபாயம் குறித்த முன்கூட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்ட, நிலைபேறான மீட்புத் திட்டத்தை உருவாக்க அனைத்து நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என்றார்.