டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !

Homeசெய்திகள்Design

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு !

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக ரூ.2.5 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். விலங்குகளை நோய்களில் இருந்து பாதுகாப்பதே இந்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம் என்றும், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன த..

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த நடவடிக்கை : எம்.பி களின் வரப்பிரசாதங்கள் இரத்து – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இன்றைய வானிலை
மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
கடன் கொடுத்த மன அழுத்தம் – 21 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இந்த இழப்பீட்டுத் தொகைகளுக்கு மேலதிகமாக, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், உலக வங்கி உதவியின் கீழ் இதற்காக ரூ.2.5 பில்லியன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
விலங்குகளை நோய்களில் இருந்து பாதுகாப்பதே இந்த தடுப்பூசி செயல்முறையின் நோக்கம் என்றும், இது சுமார் 2 மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.
மேலும் அனர்த்தங்களால் அழிக்கப்பட்ட பண்ணைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான ஆதரவும் வழங்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.