ஜேவிபி:மதிப்பதேயில்லை!

Homeசெய்திகள்

ஜேவிபி:மதிப்பதேயில்லை!

இந்திய வம்சாவளி அமைச்சரான சந்திரசேகரன் கூட தம்மை மதிப்பதில்லையென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் ஒப்பாரிகள் மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அவரது குழுவினருடன் ஒரு அன்பான உரையாடல் நடந்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நமது ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்துப் பேசினோம். பொருளாதார நெருக்கடியின் போதும், சமீபத்தில் தித்வா சூறாவளிக்குப் பிறகும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நின்றதென ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனிடையே அண்மையில் சீன சென்றிருந்த நிலையில் டெல்லிக்கு காவடி தூக்கிய ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவவுடன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் இணைந்திருந்தார்.

இளைஞனொருவர் அடித்துக்கொலை – 04 பெண்கள் உள்ளிட்ட 06 பேர் கைது
யப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 45 பேர் உயிரிழந்தனர்
புங்குடுதீவில் வன்முறை கும்பலை சேர்ந்த இருவர் கூரிய ஆயுதங்களுடன் கைது

இந்திய வம்சாவளி அமைச்சரான சந்திரசேகரன் கூட தம்மை மதிப்பதில்லையென்ற இந்திய வெளிவிவகார அமைச்சின் ஒப்பாரிகள் மத்தியில் ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மற்றும் இலங்கையைச் சேர்ந்த அவரது குழுவினருடன் ஒரு அன்பான உரையாடல் நடந்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நமது ஆழமான பிணைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம். வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சமூக நல முயற்சிகள் குறித்துப் பேசினோம். பொருளாதார நெருக்கடியின் போதும், சமீபத்தில் தித்வா சூறாவளிக்குப் பிறகும் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நின்றதென ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அண்மையில் சீன சென்றிருந்த நிலையில் டெல்லிக்கு காவடி தூக்கிய ஜனதா விமுக்தி பெரமுன பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவவுடன் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் இணைந்திருந்தார்.