செம்மணி மனித புதைகுழி: 3ம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!

Homeசெய்திகள்

செம்மணி மனித புதைகுழி: 3ம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் மார்ச் 16இல் அறிவிக்கப்படும்!

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாண

அமைச்சர்களின் விருப்பத்துக்கேற்ப தொழில்களைத் தடை செய்ய முடியாது
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் யாரும் கேட்க விரும்பாத புலனாய்வு கேள்வி – பகுதி 1
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்
கனிம அகழ்வு உரிமங்கள் இடைநிறுத்தம்


செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி அறிவிக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (09) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று திங்கட்கிழமை (09) காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது, மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் குறித்து மறுஆய்வு செய்யப்படும், மேலும் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர், குறித்த இடத்தை ஆய்வு செய்த நீதவான் அடுத்த விசாரணையை மார்ச் 16ஆம் திகதி நடத்தவும், அதேநாளில் மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான திகதியை நிர்ணயிக்கவும் உத்தரவிட்டார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி, மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான செலவு மதிப்பீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
 

COMMENTS