இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உள்ளிட்ட இலங்கை பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை இந்திய தரப்பு பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக 17-வது மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
இருதரப்பு உறவுகள் மற்றும் பாராளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் பெண்கள் தலைமைத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிப்பது தொடர்பான விடயங்களும் முக்கியமாக ஆராயப்பட்டன.
பரஸ்பர புரிதல் மற்றும் வலுவான ஜனநாயக நிறுவனங்களை மேம்படுத்துவதில் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கின்றது.
பெண்கள் தலைமைத்துவம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் ஜனநாயக மற்றும் முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களின் அதிகப்படியான பங்கேற்பு குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை – இந்தியா இடையிலான பாராளுமன்ற உரையாடல் மற்றும் மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் உறுதிப்பாட்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.