இத்தாலி ஒலிம்பிக் கிராமம் அருகே மோதல்களில் முடிந்தது போராட்டம்

Homeசெய்திகள்

இத்தாலி ஒலிம்பிக் கிராமம் அருகே மோதல்களில் முடிந்தது போராட்டம்

இத்தாலியில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில், மிலனில் நேற்று சனிக்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10,000 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்க

அவசரகால சட்டம் பிக்குகளிற்கு இல்லை!
சாணக்கியனின் தனி ஆவர்த்தனம்?
இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்


இத்தாலியில் உள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில், மிலனில் நேற்று சனிக்கிழமை அமைதியான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 10,000 க்கும் மேற்பட்ட ஆர்பாட்டக்காரர்கள்  ஒலிம்பிக் கிராமத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.  அமைதியான நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னர் பெருமளவு போராட்டக்காரர்கள் வெளியேறினர். அங்கிருந்து ஒரு சிறிய குழு காவல்துறையினருடன் வன்முறை மோதல்களில் ஈடுபட்டது.அமைதியான பேரணியைத் தொடர்ந்து, போலீசார் தடியடி, தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தொடங்கிய மிலன் கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர்.கோர்டினாவில் புதிய பாப்ஸ்லெட் ஓட்டத்தை உருவாக்க வெட்டப்பட்ட மரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதாதைகைளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துச் சென்றனர். நகரங்களைத் திரும்பப் பெறுவோம், மலைகளை விடுவிப்போம் என்று கொட்டொலிகளை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.விளையாட்டுப் போட்டிகளில் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க (ICE) நிறுவன அதிகாரிகள் இருந்ததைக் கருத்தில் கொண்டும் இந்த எதிர்ப்பு ஓரளவுக்கு இயக்கப்பட்டது.வான்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ உள்ளிட்ட அதிகாரிகளைப் பாதுகாக்கும் பணி ICE அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களில் இத்தாலி சுமார் 6,000 பாதுகாப்புப் பணியாளர்களை நிறுத்தியுள்ளது.

COMMENTS