
அமைச்சர் சந்திரசேகர் கூறுவதை நம்புவதற்கு அவர் கடவுள் இல்லை என தமிழ்ப்பிரதிநிதிகள் காட்டம்
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை. எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்ப..
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. எனவும் முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும் என தமிழ்ப்பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசாங்கத்தினால் வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நேற்று திங்கட்கிழமை (2) நெடுங்கேணியில் ‘எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்ற கோஷத்துடன் பாரிய மக்கள் எழுச்சிப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் இப்போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், ‘குடியேற்றத்திட்டங்கள் என்ற போர்வையில் வடக்கில் கடந்த காலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது உண்மை.
எனவே புதிய குடியேற்றத்திட்டங்கள் வரும்போது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானதேயாகும். இருப்பினும் கிவுல் ஓயா திட்டம் நிச்சயம் வரும். அது தமிழ் மக்களுக்கான குடியேற்றத்திட்டமே தவிர, சிங்களவர்களுக்கான திட்டமல்ல’ எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அமைச்சர் சந்திரசேகரின் கருத்து தொடர்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், புதிய குடியேற்றங்கள் நிறுவப்படும் என கிவுல் ஓயா திட்டத்தில் எழுத்துமூலம் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் அதனை முழுமையாக வாசிக்காமல் கருத்துரைத்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
‘கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக அப்பகுதியில் சிங்களவர்கள் குடியேற்றப்படமாட்டார்கள் என்றும், தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறுகின்றார். ஆனால் அங்கு ஏற்கனவே குடியேற்றப்பட்டிருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்களாவர். அவ்வாறானதொரு பகுதியில் குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பமாட்டார்கள். எனவே அங்கு குடியேறுவதற்குத் தமிழர்கள் விரும்பவில்லை எனக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது’ எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.
அத்தோடு இத்திட்டத்தின் மூலம் மூழ்கடிக்கப்படும் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகள் எனவும், அதன்மூலம் பெறப்படும் நீர் அங்குள்ள சிங்களக் குடியேற்றங்களுக்கு விநியோகிக்கப்படபோவதாகவும் தெரிவித்த அவர், ஆகவே அரசாங்கம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தாம் இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்டார்.
அதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் பேசுவதில் எவ்வித பயனுமில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன், மாறாக இதுபற்றி இவ்விடயதானத்துக்குப் பொறுப்பான நீர்ப்பாசனத்துறை அமைச்சரே பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்.
‘அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. ஆகவே கடந்தகால அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இத்திட்டத்தின் மூலம் அப்பகுதிகளில் சிங்களவர்களே குடியேற்றப்படுவார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏனெனில் சந்திரசேகர் கூறுவதை அவ்வாறே நம்புவதற்கு அவர் ஒன்றும் கடவுள் அல்ல.
அதேபோன்று தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டிருக்கிறது என நம்புவதற்கு ஏதுவான வகையில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக பயங்கரவாதத்தடைச்சட்டப் பிரயோகம் மற்றும் அதனைப் பதிலீடு செய்வதற்கான புதிய சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக கடந்தகால நிலைவரங்களே தற்போதும் தொடர்கின்றன.
ஆகவே முதலாவதாக மக்களின் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பிரச்சினைக்குரிய இவ்விடயம் தொடர்பில் உரிய விடயதான அமைச்சர் தமிழ்ப்பிரதிநிதிகளுடன் பேசவேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.

