வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு

Homeசெய்திகள்Design

வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு

திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (07) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறித்து கிரித்தல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்க ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார். இதன் போது வாயில் காயம் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டதோடு, வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதற்கமைய இதுவரை ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பயன்படுத்தி மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்க..

ஐக்கிய மக்கள் சக்திக்கு 6 வயது! கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகள்
தற்போதைய அரசாங்கத்தை இந்நாட்டு மக்கள் மிக விரைவில் வெறுத்து ஒதுக்குவார்கள் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரியால் நிஷாந்த
கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!
உலர்ந்த கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது !
நாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு

திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (07) உயிரிழந்த நிலையில் யானை ஒன்று இருப்பதாக கிடைக்கபெற்ற தகவலின் அடிப்படையில் குறித்து கிரித்தல வனவிலங்கு திணைக்கள வைத்தியர் கலிங்க ஆராய்ச்சி விசாரணையை முன்னெடுத்தார்.
இதன் போது வாயில் காயம் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டதோடு, வாய் வெடி உட்கொண்டமையினாலேயே குறித்த யானை உயிரிழந்துள்ளதாகவும் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மொரவெவ பிரதேசத்தில் கடந்த வருடத்தில் மாத்திரம் ஆறு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அதற்கமைய இதுவரை ஏழு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
மேலும் மொரவெவ பிரதேசத்தில் வனவிலங்குகள் அதிகளவில் கொல்லப்பட்டு வருவதாகவும் தேவையற்ற வெடி பொருட்களை பயன்படுத்தி மிருகங்களை கொல்ல வேண்டாம் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த யானை மரணித்தமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் திணைக்களத்தின் உயரதிகாரி யொருவர் குறிப்பிட்டார்