திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வ
திருகோணமலை நகரின் கடலோரப் பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கீகரிக்கப்படாத குடிசை கட்டப்பட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டதாகக் கூறி கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களத்தால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
திருகோணமலை, கோட்டை வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் தலைவர் வணக்கத்துக்குரிய கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், வணக்கத்துக்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர், வணக்கத்துக்குரிய சுகிதவன்ச திஸ்ஸ தேரர் மற்றும் வணக்கத்துக்குரிய நந்த தேரர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

COMMENTS