Homeசெய்திகள்

அமெரிக்கா – வங்கதேசம் இடையே வர்த்தக ஒப்பந்தம்

வங்கதேசத்தின் மீதான வரிகளை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. திங்கட்கிழமை (பிப்ரவரி 9) இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது

நீருக்குள் கசிப்பு ; மூவர் கைது
யாழில் இருந்து தப்பி சென்ற வன்முறை கும்பலை சேர்ந்தவர்கள் 09 வருடங்களின் பின் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர்
பிரித்தானியாவில் நிலவும் கடுமையான வானிலை
மருத்துவர்கள் கோத்தா விசுவாசிகளாக உள்ளனர்!
மருதனார்மடம் சந்தைக்கு எடுத்துச்செல்லப்பட்டது போலித் துப்பாக்கியாம்! – நபர் கைது


வங்கதேசத்தின் மீதான வரிகளை 19 சதவீதமாக அமெரிக்கா குறைத்துள்ளது. திங்கட்கிழமை (பிப்ரவரி 9) இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

“அமெரிக்காவும் வங்கதேசமும் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த ஒரு பரஸ்பர வர்த்தகத்தில் (ஒப்பந்தம்) ஒப்புக் கொண்டுள்ளன” என்று வெள்ளை மாளிகையில் இருந்து இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் முக்கிய விதிமுறைகள் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளன. “வங்கதேசப் பொருட்களின் மீதான வரி விகிதத்தை அமெரிக்கா 19 சதவீதமாகக் குறைக்கும். வரி விலக்கு அளிப்பதற்கான பொருட்கள் அடையாளம் காணப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ரொய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், “வங்கதேசத்தில் அமெரிக்க பருத்தி மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சில ஜவுளி மற்றும் ஆடைப் பொருட்களுக்கு பூஜ்ஜிய பரஸ்பர வரிகளுக்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது” என்று கூறினார்.

இரசாயனங்கள், மருத்துவ சாதனங்கள், இயந்திரங்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப உபகரணங்கள், எரிசக்தி பொருட்கள், சோயா பொருட்கள், பால் பொருட்கள், மாட்டிறைச்சி, கோழி, கொட்டைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட அமெரிக்க தொழில்துறை மற்றும் விவசாய பொருட்களுக்கு அதிக சந்தை மதிப்பை வழங்க வங்காளதேசம் உறுதிபூண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு வங்காளதேசத்திற்கு 37 சதவீத வரியை அறிவித்தார். பின்னர் அது ஆகஸ்ட் மாதம் 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.