பெங்களூர்: ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் ஆர்சிபி விராட் கோலி, GT வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை எதிர்கொண்ட விதத்தை முன்னாள் கேப்டன் கிரிஸ் ஸ்ரீகாந்த், பாராட்டியுள்ளார். மே 31 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில், RCB 156 ரன்கள் இலக்கை துரத்தியபோது, கோலி ரபாடாவின் இரண்டாவது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பலப்பரீட்சை, கோலியின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் ஒருதலைப்பட்சமாக மாறியது.
அவர் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்து, 18 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் RCB-ஐ வெற்றி பெறச் செய்தார். கோலியின் இந்த சிறப்பான ஆட்டம், RCB அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவியது. இச்சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மட்டுமே இதுவரை எட்டியுள்ளன.

தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், "கோலி திட்டமிட்டே ரபாடாவை குறிவைத்து தாக்குதல் நடத்தினார். அது குஜராத் டைட்டன்ஸ் அணியை அதிர்ச்சியடையச் செய்தது. ரபாடா தனக்கு ஈடு அல்ல என்பதை நிரூபிக்கவே கோலி விரும்பினார்.
IPL 2026: ஆர்சிபிக்கு சச்சின் வாழ்த்து.. வெல்கம் டூ தி கிளப் என பாராட்டிய சிஎஸ்கே.. கோலிக்கு ரெய்னா புகழாரம்
தன்முனைப்புடன் ஆடிய கோலி, தனக்கு நிகர் யாருமில்லை என்பதை நிரூபிக்கும் முனைப்பில் இருந்தார்" என்று ஸ்ரீகாந்த் குறிப்பிட்டார். மேலும், "கோலியின் களத்தில் இருக்கும் போதே அணியில் உள்ள மற்ற வீரர்கள் எந்தவித கவலைகளும் இன்றி ஆடுவார்கள். அவர் எந்த சிரமமும் இன்றி இலக்கைத் துரத்தி, தைரியமாகவும் விளையாடினார். அவரும் வெங்கடேஷ் ஐயரும் பவர்பிளேயில் சிராஜ் மற்றும் ரபாடாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த விரும்பினார்கள். அங்கேயே அவர்கள் போட்டியை முடித்துவிட்டனர்" என்றார்.
கடந்த சில ஆண்டுகளாக T20I மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், விளையாட்டு மீதான கோலியின் நீடித்த ஆர்வம் மற்றும் வெற்றிக்கான பசியை ஸ்ரீகாந்த் பாராட்டினார். "ஒரு வீரர் கோலியைப் போல தனது முழு மனதையும் ஆத்மாவையும் வெளிப்படுத்தும் போது, முழு அணியும் உற்சாகமடைகிறது" என்று அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
37 வயதான கோலி, ஐபிஎல் 2026 தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 675 ரன்கள் (சராசரி 56+, ஸ்ட்ரைக் ரேட் 165.84) குவித்து, 4வது அதிக ரன் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். "அவர் 2024 ஆம் ஆண்டில் T20I போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகும் இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வென்று, ஆண்டுதோறும் 600 ரன்களுக்கு மேல் குவிப்பது அவரது ஆர்வம், ஆக்ரோஷம் மற்றும் விளையாட்டு மீதான அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.
IPL 2026: பைனலில் கவனத்தை ஈர்த்த குர்னல் பாண்டியா மகன்.. கோலி, தந்தை-மகன் செய்த நெகிழ்ச்சி
அணிக்கான அவரது வெற்றி மன உறுதி அற்புதம். ஒரு வீரர் கோலியைப் போல தனது முழு மனதையும் ஆத்மாவையும் வெளிப்படுத்தும் போது, முழு அணியும் உற்சாகமடைகிறது" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்தார். தொடர்ந்து நான்கு ஐபிஎல் சீசன்களில் கோலி 600 ரன்களுக்கு மேல் எடுத்த சாதனை படைத்துள்ளார். இதில் 2024 சீசனில் 741 ரன்கள் குவித்தார்.