← முகப்பு செய்திகள்

IPL 2026- Rajat Patidar Sets IPL Captaincy Benchmark With Consecutive Finals For

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 24 பார்வைகள்
IPL 2026- Rajat Patidar Sets IPL Captaincy Benchmark With Consecutive Finals For

தர்மசாலா: ஐபிஎல் 2026 சீசனில் ரஜத் பட்டிதார் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கேப்டனாக அடுத்தடுத்த இறுதிப் போட்டிகளுக்கு வழிநடத்திய முதல் ஆர்சிபி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் அவர் வரலாற்று பக்கங்களில் நிரந்தர இடத்தை உறுதி செய்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இந்த சாதனையை எட்டிய ஐந்தாவது கேப்டன் இவராவார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான இந்த கிரிக்கெட் வீரர், ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்னதாக RCB-யின் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணிக்காக இரண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குத் தலைமை தாங்கிய முதல் வீரர் என்ற சிறப்பையும் பட்டிதார் பெற்றுள்ளார்.

பட்டிதார் தலைமைப் பொறுப்பை ஏற்கும் முன்பு, RCB அணி 17 சீசன்களில் மூன்று முறை மட்டுமே ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறியிருந்தது. அந்த மூன்று முறையும் அனில் கும்ப்ளே (2009), டேனியல் வெட்டோரி (2011), விராட் கோலி (2016) என வெவ்வேறு கேப்டன்களின் கீழ் நடந்தன. ஆனால், பட்டிதார் தனது இரண்டு சீசன் கேப்டன்சியிலேயே அணியை அடுத்தடுத்து இரண்டு இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

IPL 2026: பவுண்டரி அடித்த பிறகும், அவுட் என அறிவிக்கப்பட்ட தமிழக வீரர் சாய் சுதர்சன்.. என்ன நடந்தது?

இன்னும் இந்தியாவிற்காக டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத பட்டிதார், ஐபிஎல் கேப்டன்களின் பட்டியலில் இணைந்துள்ளார். எம்.எஸ். தோனி, ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்து, அடுத்தடுத்த ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற ஐந்தாவது கேப்டன் இவராவார்.

எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை 2010 முதல் 2013 வரை தொடர்ச்சியாக நான்கு ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்கு வழிநடத்தினார். பின்னர் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளிலும் அடுத்தடுத்து இறுதிப் போட்டிகளுக்கு அழைத்துச் சென்றார். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் ஷர்மா 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தனது அணியை தொடர்ச்சியாக இறுதிப் போட்டிகளுக்கு வழிநடத்தி, ஐபிஎல் வரலாற்றில் ஒரு முத்திரையைப் பதித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் (GT) அணிக்காக 2022 இல் ஐபிஎல் கேப்டனாக அறிமுகமான ஹர்திக் பாண்டியா, அதே ஆண்டில் (2022) மற்றும் அதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டிலும் தனது அணியை இறுதிப் போட்டிக்கு வழிநடத்திச் சென்றார். இதே வரிசையில், ஷ்ரேயஸ் ஐயர் 2024 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், 2025 இல் பஞ்சாப் கிங்ஸ் அணியையும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று தனது தலைமைப் பண்பை வெளிப்படுத்தினார்.

கடந்த 2025 இல் RCB-க்கு முதல் ஐபிஎல் கோப்பையைப் பெற்றுத்தந்த பட்டிதார், இந்த செவ்வாய்க்கிழமை தரம்சாலாவில் நடந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 33 பந்துகளில் 93 ரன்கள் குவித்து, குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு RCB தகுதி பெறுவதை உறுதிசெய்தார்.

RCB vs GT: முதல் குவாலிபையரில் நடந்ததை அப்படியே மறந்துவிடனும்! இந்த விசயத்தில் சொதப்பிவிட்டோம்- கில்

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த வலது கை பேட்ஸ்மேன், இப்போது ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்த கோப்பைகளை வென்ற மூன்றாவது கேப்டன் என்ற சிறப்பைப் பெற இலக்கு கொண்டுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 31 அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் RCB களமிறங்கும் போது இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net