தர்மசாலா: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவது உறுதியாகியுள்ளது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் அவர் உடல் தகுதிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. தர்மசாலாவில் சனிக்கிழமை தொடங்கவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கு அவர் தற்போது முழுமையாகத் தயாராக உள்ளார்.
ஐபிஎல் தொடரின் போது பாண்டியா முதுகுவலி காரணமாக அவதிப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. இருப்பினும், கடந்த ஐந்து நாட்களில் அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டார்.

அவர் வலைப்பயிற்சியில் 10 ஓவர்களை முழுமையாக வீசி பார்த்தார். உடல் தகுதி தொடர்பான அனைத்து சோதனைகளிலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார் என பி.சி.சி.ஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.அவர் நேரடியாகத் தர்மசாலா செல்வாரா அல்லது சண்டிகர் முகாமில் இணைவாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், அணியில் அவரது பங்கேற்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய அணியின் சமநிலையைத் தர்மசாலாவில் வலுப்படுத்தும்.
முன்னாள் ரோகித் சர்மாவும் உடல் தகுதிச் சான்றிதழை பெற்றுள்ளார். தொடை தசைப் பிடிப்பு தொடர்பான பரிசோதனைக்காக அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மையத்தில் தங்கி, உடல்தகுதியை நிரூபித்தார். ஐபிஎல் தொடரின் போது இந்த காயம் காரணமாக அவர் ஐந்து போட்டிகளில் பங்கேற்கவில்லை. இறுதிக்கட்டத்தில் அவர் விளையாடினாலும், அவரது தற்போதைய முழு உடல் தகுதி குறித்த சந்தேகம் அணியில் நீடித்த நிலையில், தற்போது அவரும் திரும்பியுளளார்.
IND A vs SL A: வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்.. காலை வாரிய பிராப்சிம்ரன்.. ருதுராஜ் அரைசதம்
முன்னதாக, இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சிதஞ்சு கோடக் நம்பிக்கையுடன் உள்ளார். சனிக்கிழமை தொடர் தொடங்குவதற்கு முன்பாக, ரோகித் மற்றும் பாண்டியா இருவருமே அணிக்குத் திரும்புவார்கள் என்று அவர் கூறியுள்ளார். ரோகித் சர்மா திரும்பியதன் மூலம், இந்திய அணியின் வெற்றிக்குத் தேவையான அனுபவம் கில்லுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027 உலககோப்பை தொடருக்கான பயணத்தை இதன் மூலம் இந்திய அணி தொடங்குகிறது. விராட் கோலி இந்த தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.