யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17.07.25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருநகர் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை பொலிஸார் சோதனையிட்ட போது, அவர்களிடம் இருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மூவரையும் கைது செய்ய காவற்துறையினர் , அவர்களை குருநகர் காவல்  நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்