8
முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் யுத்தகாலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகித்து இன்றையதினம் வெள்ளிக்கிழமை அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021ம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.