யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் காவல்துறை தடுப்புக் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். சுன்னாகம் பகுதியில் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர் ஒருவரை விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக காவல்துறை தடுப்பு காவலில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்ய காவல்துறையினர் அனுமதி கோரி இருந்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்று அனுமதி வழங்கிய நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமையுடன் , காவல்துறை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மன்று அனுமதி வழங்கிய காலக்கெடு நிறைவடைய இருந்த நிலையில் , சந்தேகநபரை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்த காவல்துறையினர் அழைத்து சென்றனர். அந்நிலையில் சந்தேகநபர் காவல்துறைக் காவலில் இருந்து தப்பியோடியுள்ளார். தப்பியோடிய சந்தேகநபரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளனர்.
போதைப்பொருளுடன் கைதானவர் காவல்துறைக் காவலில் இருந்து தப்பியோட்டம் – Global Tamil News
3