ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் உறுப்பினர்கள் தன்னைக் கொல்லத் தயாராகி வருவதால், பாதுகாப்பு அதிகாரிகள் இருவரின் பாதுகாப்பைக் கோரி கலகொட அத்தே ஞானசார தேரர் பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.தனது விஹாரைக்கு வந்த புலனாய்வு அதிகாரிகள், அச்சுறுத்தல் குறித்து தமக்குத் தெரிவித்ததாகவும் தேரர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.நீண்ட காலமாக நாட்டில் தோன்றியுள்ள உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து பல்வேறு வெளிப்படுத்தல்களால் பல தீவிரவாத நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் ஞானசார தேரர், இந்த சூழ்நிலையில் பாதுகாப்பு அடிப்படையில் தமக்கு ஆபத்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார்.இதனிடையே தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர், ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் உடனடி பாதுகாப்பு கோரியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாக இருப்பதாக தேரர் தெரிவித்தார்.
ஞானசாரர்,அம்பிட்டி:பாதுகாப்பு அச்சமாம்!
5