கொழும்​பிலிருந்து மும்​பைக்கு போதைப்பொருள் – ஐவர் கைது – பலகோடி சிக்கியது! – Global Tamil News

by ilankai

இந்தியாவின் மும்​பை​ சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யத்தில் 47 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்​பிலிருந்து மும்​பைக்கு சென்ற விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பில் இந்திய  மத்​திய நிதி அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், இலங்கை தலைநகர் கொழும்​பிலிருந்து மும்​பைக்கு வரும் விமானத்​தில் கொகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக இரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, வரு​வாய் புல​னாய்​வுத் துறை அதி​காரி​கள், மும்​பை​யின் சத்​ரபதி சிவாஜி சர்​வ​தேச விமான நிலை​யம் சென்றடைந்த ஒரு பெண் பயணி​யின் உடமை​களை பரிசோ​தித்​தனர். இதன்போது 09 தேயிலை தூள் பக்கெற்றுகளில் மறைத்து வைத்​திருந்த கொகைன் போதைப் பொருளை பறி​முதல் செய்​தனர். சுமார் 4.7 கிலோ நிறையுடன் அதன் மதிப்பு 47 கோடி ரூபா ஆகும். கொகைன் கடத்தி சென்ற பெண், அதை வாங்​கிச் செல்ல சென்ற  ஒரு​வர் உட்பட 5 பேரை அதி​காரி​கள் கைது செய்​துள்​ளனர். அவர்​கள் மீது போதைப்​பொருள் தடுப்பு சட்​டத்​தின் கீழ் வழக்கு பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. சர்​வ​தேச போதை கடத்​தல் கும்​பல், அண்மை கால​மாக போதைப்​பொருளை கடத்த இந்​திய பெண்​களை பயன்​படுத்தி வரு​கின்​றனர். குறிப்​பாக,  இதனைக் கண்​டறிவதைத் தடுக்க உணவுப் பொருட்​களுக்​குள் வைத்​து கடத்​துகின்​றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts