ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று இரவு ஹோர்மஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி உலங்குவானூர்திகளில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது மாபெரும் இராணுவம் தெரிவித்துள்ளது என்று ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டிருந்தார் டிரம்ப்.
விபத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு விமானிகளும் பாதுகாப்பாகவும் காயமின்றி உள்ளனர் என்று கூறிய டிரம்ப், அமெரிக்கா பதிலடி கொடுத்தார் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டிரம்ப் கூறினார்.
தாக்குதல் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை விவரிக்காமல், அந்த உலங்குவானூர்தி கடலில் காணாமல் போய்விட்டது என்று அமெரிக்க இராணுவம் முன்னதாக தெரிவித்திருந்தது.